மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம், நாடு முழுவதும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழில்துறையினருடனான கலந்துரையாடலை நாளை (2024 பிப்ரவரி16) ஹைதராபாத்தில் நடத்த உள்ளது. இந்தியாவில் நீடித்த எரிசக்தித் தீர்வுகளை உருவாக்குவதற்கு நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வளங்களின் திறனைப் பயன்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.
நாட்டின் எதிர்கால எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின்படி, அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் ரூ. 8,500 கோடி முதலீட்டு செலவை வழங்கும்.
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பது, எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் தூய்மைத் தொழில்நுட்பங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் அரசின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது.
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களுடன் தொடர்புடைய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்க இது வகை செய்யும். கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரை இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கும். இதில் பங்கேற்பவர்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு, இந்தியாவில் வாயுவாக்கல் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வார்கள்.
நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் அம்ரித் லால் மீனா இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி.எம்.பிரசாத்தும் இதில் பங்கேற்கிறார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..