மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல் சக்தி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திங்களன்று மும்பை தொழில்நுட்ப வாரத்தின் போது அனந்த் கோயங்காவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறைகள் குறித்து பேசிய ராஜீவ் சந்திரசேகர், தொலைத் தொடர்புத்துறை போன்ற முக்கிய துறைகளை போதுமான அளவு ஒழுங்குபடுத்தாத முந்தைய அரசு நிர்வாகங்களிலிருந்து மாறுபட்டு, தற்போதைய நரேந்திர மோடி அரசு மாற்றத்திற்கான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது பற்றி எடுத்துக் கூறினார்.
12 ஆண்டுகளுக்கும் மேலான தனது விரிவான தொழில்முனைவோர் அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் பேசிய அமைச்சர், “தொலைத் தொடர்புத் துறையில் முந்தைய அரசுகளில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளன. எனவே, ஒழுங்குமுறை பற்றி அரசு பேசும்போது ஆரோக்கியமான நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகம் குறித்த கேள்வி எழுகிறது. ஏனென்றால் ஒழுங்குமுறை ஒரு குறிப்பிட்ட கொள்கையை நோக்கி முன்னெடுக்கப்படுகிறது அல்லது அரசியல்வாதியோ, அரசோ கட்டுப்பாடுகளை முன்னிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது என்ற உணர்வு உள்ளது. ஆனால், ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான தற்போதைய அரசின் அணுகுமுறை வெளிப்படையானதாகவும், கலந்தாலோசிப்பதாகவும் உள்ளது. இது அரசை ஒழுங்குபடுத்துவதைப் பற்றியது அல்ல, மாறாக அனைத்து பங்கெடுப்பாளர்களும் ஒன்றிணைந்து நமது பொருளாதாரத்தின் எந்தவொரு பிரிவின் ஒழுங்கான வளர்ச்சிக்கும் முக்கியமான கட்டுப்பாடுகளை உருவாக்குவது பற்றியது.
சீனாவுக்கு எதிராக இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய நிலை, குறிப்பாக செமிகண்டக்டர் தொழிலில் முன்னேற்றத்தில் நமது நாட்டின் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பற்றி மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
“சீனாவைப் பொறுத்தவரை, வளர்ந்து வரும் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் கடந்த தசாப்தத்தில் அவர்கள் கொண்டிருந்த வேகம் இப்போது சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு உள்ளிட்டவை காரணமாக அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தில் அவர்கள் நிச்சயமாக நம்பகமான பங்காளியாக பார்க்கப்படுவதில்லை. கடந்த 75 ஆண்டுகளில் தவறவிட்ட வாய்ப்புகளை இந்தியா மாற்றியமைக்கிறது என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும். பல தசாப்தங்களுக்குப் பிறகு 10 பில்லியன் டாலர் செமிகண்டக்டர் முதலீடுகள் நமது நாட்டிற்கு வருகின்றன. இந்தத் துறையில் மீதான வடிவமைப்பு கண்டுபிடிப்பு சூழல் அமைப்புடன், இந்தியா செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையத்தையும் தொடங்குகிறோம், இது உலகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் ஆராய்ச்சி செய்யும் அதிநவீன ஆராய்ச்சி மையமாக இருக்கும், “என்று அமைச்சர் மேலும் கூறினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..