“நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், சமீபத்திய தொற்றுப் பாதிப்பு நெருக்கடியின் போது இது நிரூபிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் லத்தூரில் உள்ள விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் திரு மோகன் மதுகர் ராவ் பகவத் முன்னிலையில் இன்று அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகில் பல சுகாதார நடைமுறைகள் உள்ளன என்று கூறினார். இருப்பினும் இந்திய மரபியலுடன் இணைந்த நமது சொந்த சுகாதார மாதிரியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
புற்றுநோய் மற்றும் மனநல பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் பல மருத்துவ வழிகாட்டுதல்களை நமக்கு வழங்குகின்றன என்றார். இந்தியாவின் பாரம்பரியம் பல்வேறு நோய்களை எதிர்கொள்வதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் அறிவைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுகாதார சேவைகளில் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு பாடுபடுகிறது என்று அவர் கூறினார். மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் இந்திய சுகாதாரத்துறை நிபுணர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அமைச்சர், இந்த பாரம்பரியம் நமது பழமையான கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது என்றார்.
கொவிட் நெருக்கடி மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்ததுடன், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற மதிப்புகளையும் உலகிற்கு காட்டியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது என்பதை குறிப்பிட்ட அவர் மக்களுக்கு சேவை செய்வதை நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறினார். மருத்துவம் என்பது ஒரு வணிகம் அல்ல என்றும் நமது கலாச்சாரத்தில் அது உள்ளார்ந்த சேவையாக உள்ளது என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..