தருமபுரம் தமிழ்ச்சைவ திருமடத்தின் ஆதீனம் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் மீது மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மாவட்டச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோருடன், திமுக ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து அவதூறான கருத்துகளைக் கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழர்களின் தனிப்பெரும் சமயமாம் சைவ சமயத்தின் தலைமைப் பீடங்களாகத் திகழ்பவை சைவத் திருமடங்களாகும். சிவநெறியும், செந்தமிழும் வளர்க்கும் பொருட்டு அருட்செல்வர் குருஞான சம்பந்த தேசிய சுவாமிகள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு 450 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த திருமடமாக தருமபுரம் சைவமடம் திகழ்கிறது. இறைத் தொண்டுடன், கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் ஏற்படுத்தி சமூகத் தொண்டும் புரிகிறது தருமபுரம் சைவமடம். தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்க தருமபுரம் ஆதீனம் தமக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தினைக் கொடையாக வழங்கிய பெருமைக்குரியது.
அத்தகைய சிறப்புமிக்க தருமபுரம் சைவ மடத்தின் தலைமை 27-வது ஆதீனமாக விளங்கும் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய சுவாமிகள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான அவதூறுகளைப் பரப்புவதும், 20 கோடி ரூபாய் பணம் கேட்டு கூலிப்படையினர் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக, தமிழ்நாட்டில் தமிழ் வளர்க்கும் சைவ மடங்களையும், அதன் தலைமை பதிகளான ஆதினங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் அரசியல் லாபமடையத் துடிக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இத்தகைய அவதூறு பரப்புரைகள் இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது.
மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவருடன், திமுக ஒன்றியச் செயலாளரும் இணைந்து கூட்டாக இத்தகைய சதிச்செயல்களில் ஈடுபட்டுள்ளது பெருமைக்குரிய தமிழர் மெய்யியல் அடையாளங்களை அழிப்பதில் ஆரியமும், திராவிடமும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுகிறது என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்கள் ஆதரவு பெற்ற ஆதினங்கள் மீதே ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக – திமுக கும்பல் அவதூறுகளைப் பரப்பி, கொலை மிரட்டல் விடுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபடுகிறது என்றால், இவர்களது ஆட்சியின் கீழ் வாழும் அப்பாவி மக்களின் நிலை என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. தமிழ்ச்சைவ திருமடங்கள் மீதும், அதன் தலைமை பதிகளான போற்றுதற்குரிய ஆதீனங்கள் மீதும் அவதூறுகள் பரப்புவதையோ, இழிவுப்படுத்தி அவமதிப்பதையோ அனுமதிக்க முடியாது; நாம் தமிழர் கட்சி அதனை ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது; மக்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, பெருமதிப்பிற்குரிய தருமபுரம் ஆதினம் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக – திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..