“செல்வ பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது என்றும்,அதற்காக தாங்கள் யாரிடமும் சென்று கூட்டணிக்காக கெஞ்சவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்”
“அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக இருப்பதாகவும் பத்து நாட்களில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்’
“போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் மத்திய அரசு சுணக்கம் காட்டாமல் தீவிரமாக செயல்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்”
அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து, அவர்கள் உரிமையை மீட்டெடுக்கும் அளவிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும்.
திமுகவை சேர்ந்தவர்களே போதை பொருள் கடத்தியுள்ளனர். எந்த கட்சியிலும் இல்லாத அயலக அணி பிரிவு போதை பொருள் கடத்துவதற்காகவே திமுகவில் உருவாக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு ஜாபர் சாதிக் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள், மேலும் அவரிடம் யாரெல்லாம் பணம் பெற்றுள்ளார்கள் என கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறினார்.
கிருத்திகா உதயநிதி இயக்கும் மங்கை படத்திற்கு ஜாபர் சாதிக் தான் தயாரிப்பாளர் அதுமட்டுமல்லாமல் டிஜிபி இடமே விருது வாங்கியுள்ளார்..அவரின் பின்னணி குறித்து கூட உளவுத்துறை விசாரிக்காமல் இருந்திருக்கிறார்கள் எனவே மத்திய அரசு சுணக்கம் கட்டாமல் விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கூறினார்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை செல்வப் பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது. அதற்காக நாங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவில்லை என கூறினார்.
விட்டால் அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவார்கள் என பயந்து திமுக அவசர அவசரமாக கூட்டணி பங்கீடு செய்து வருவதாக கூறிய ஜெயக்குமார் கத்திரிக்காய் விளைந்தால் கடைத்தெருவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்பது போல இன்னும் 10 நாட்களில் யார் யார் எந்தெந்த கூட்டணிக்கு தாவி செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் எனவும் கூறினார்.
அதிமுக-வின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவதற்கு கட்சிகள் தயாராக இருக்கின்றன.இன்னும் பத்து நாட்களில் எந்தெந்த கட்சிகள் என்பது குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார் எனவும் கூறினார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. வண்டலூரில் திமுகவின் ஒன்றிய செயலாளருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது.
மத்திய அரசுக்கு மாநில அரசு பல லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கொடுக்கிறது ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல தான் மத்திய அரசு திருப்பிக் கொடுக்கிறது…இவ்வளவு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்யக் கூடாது என கூறினார். வரி பகிர்வை சீரானதாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










