வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம், 2023 மற்றும் அதன் விதிகளை அரசிதழில் மத்திய அரசு அறிவித்துள்ளது, இதன் விளைவாக இந்த சட்டம் 2024 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இனிமேல், பருவ இதழ்களின் பதிவு பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் , 2023 மற்றும் பத்திரிகை மற்றும் பருவ இதழ்களின் பதிவு விதிகளால் நிர்வகிக்கப்படும். இந்த அறிவிப்பின்படி, இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகம் – இந்திய செய்தித்தாள்களின் முன்னாள் பதிவாளர் புதிய சட்டத்தின்படி செயல்படும்.
டிஜிட்டல் இந்தியாவின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் இதர பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான இணையதள வசதியை புதிய சட்டம் வழங்குகிறது. பதிப்பாளர்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு படிகள் மற்றும் ஒப்புதல்களை உள்ளடக்கிய சிக்கலான நடைமுறைகளை புதிய முறை மாற்றியமைக்கிறது.
முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், புதிய சட்டத்தின்படி விண்ணப்பங்களைப் பெறுவதற்காக தலைமை பத்திரிகை பதிவாளர் பிரஸ் சேவா இணையதளத்தை தொடங்கினார்.
பருவ இதழ் ஒன்றை அச்சிடுபவருக்கு அறிவித்தல், அயல்நாட்டு இதழ் ஒன்றின் நகல் பதிப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், பருவ இதழின் பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கான வெளியீட்டாளரின் விண்ணப்பம், பதிவுச் சான்றிதழைத் திருத்துவதற்கான விண்ணப்பம், பருவ இதழ்களின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம், பருவ இதழ் வெளியீட்டாளரின் வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும், ஒரு பருவ இதழின் பிரதிகள் விற்பனையை சரிபார்க்கும் நடைமுறை பிரஸ் சேவா இணையதளம் மூலம தெரிவிக்கப்படும்.
பிரஸ் சேவா இணையதளம் காகிதமில்லா நடைமுறையை செய்கிறது மற்றும் மின்னணு கையொப்ப வசதி, டிஜிட்டல் கட்டண நுழைவாயில், உடனடி பதிவிறக்கத்திற்கான க்யூஆர் குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் சான்றிதழ்கள், அச்சகங்கள் மூலம் தகவலை வழங்குவதற்கான ஆன்லைன் அமைப்பு, தலைப்பு கிடைப்பதற்கான நிகழ்தகவு சதவீதம், அனைத்து வெளியீட்டாளர்களுக்கும் பதிவுத் தரவுக்கான ஆன்லைன் அணுகல், வருடாந்திர அறிக்கைகளை தாக்கல் செய்தல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
சாட்பாட் அடிப்படையில் தொடர்பு கொண்டு குறை தீர்க்கும் முறையை ஏற்படுத்தவும் இது விரும்புகிறது. பிரஸ் சேவா இணையதளம் (prgi.gov.in) தொடர்புடைய அனைத்து தகவல்களுடனும் பயனர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது.
புதிய சட்டத்தின்படி, பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான அனைத்து விண்ணப்பங்களும் பிரஸ் சேவா இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, பருவ இதழ்கள் வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள் அதை வெளியிடுவதற்கு முன்பு தங்கள் தலைப்பைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செயல்முறை ஆன்லைனில் இருக்கும் மற்றும் மென்பொருள் மூலம் வழிநடத்தப்படுவதால், விண்ணப்பத்தில் முரண்பாடுகளுக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்,
இதன் விளைவாக விண்ணப்பங்கள் விரைவாக செயலாக்கப்படும். விண்ணப்பத்தின் தற்போதைய நிலை அனைத்து நிலைகளிலும் புதுப்பிக்கப்பட்டு, விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தவறான தகவல் காரணமாக ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
விரிவான தகவல்களுக்கு, வெளியீட்டாளர்கள் மற்றும் பிற பங்கெடுப்பாளர்கள் பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் சட்டம் மற்றும் பிஆர்பி விதிகளின் விதிகளை கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..