• Mon. Oct 20th, 2025

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Mar 12, 2024
இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.3.2024) முகாம் அலுவலகத்தில், ” உதவுதல் நம் முதல் கடமை” என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பரிசுத் தொகைப்பினை பெற்றுக் கொண்ட இஸ்லாமியப் பெருமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.