தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமையான திட்டமாக “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை 06.03.2024 அன்று தொடங்கிவைத்து, பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக இன்றைதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டம், கோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா க/பெ.மணிகண்டன் என்ற பயனாளியிடம் காணொளிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், இம்மாதத்திற்கான உரிமைத் தொகை கிடைப்பெற்றதா என்பது குறித்தும், உரிமைத் தொகை வங்கி கணக்குகளின் வாயிலாக கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இத்தொகை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். இதேபோன்று மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் உதவியாக இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.
இந்த உரையாடலில் கோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் முறையாக வழங்கப்படுவதாகவும். இந்த மாதத்திற்கான தொகை தனது வங்கி கணக்கில் வாயிலாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகளிர் பயணத்தின் மூலம்தான் தாங்கள் அதிக பயணங்கள் மேற்கொள்வதாகவும் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் உரிமைத் தொகையினை தனது மகனின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்ததுடன், தனது 7 வயது மகன் மதன்ராஜ் என்பவருக்கு இரத்தப்புற்று நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், சிகிச்சைக்கு போதிய பணமில்லாததால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாங்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அவரிடம் உங்கள் கோரிக்கையினை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கேற்ப உடனடி நடவடிக்கையாக அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருத்துவக்குழு அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று சிறுவன் மதன்ராஜ்க்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ராதிகா என்பவரிடம், அவரது மகன் மதன்ராஜ் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு இலட்சத்திற்கான ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். அவரது மருத்துவ தொடர் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் சுகாதாரத் துறை வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காசோலையினை மாவட்ட தொடர்ந்து, மதன்ராஜ் என்பவரின் தாயார் ராதிகா அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வருவதால் மகனின் அன்றாட மருத்துவ செலவிற்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும், தனக்கு தையல் பயிற்சி நன்றாக தெரியும் என்றும், இலவச தையல் இயந்திரம் வழங்கினால் அது தனது மகனின் மருத்துவ தேவைகளுக்கு நிறைவேற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் அவரது விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பிற்பட்டோர் நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..