பா.ஜ.க. கூட்டணியுடனான அதிருப்தியால் ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ஒன்றிய அமைச்சரும், பஸ்வான் தம்பியுமான பசுபதிகுமார் பராஸ் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி, ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான கட்சி, முன்னாள் அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா கட்சிகள் இடம் பெற்றன.
இந்த நிலையில் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சியும் பா.ஜ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்தது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தலைவர் நட்டா ஆகியோர் சம்மதம் தெரிவித்து 5 சீட் ஒதுக்கியதாக தகவல் வெளியானது. மேலும் சிராக் பஸ்வான் சித்தப்பா பராஸ் போட்டியிட்ட ஹாஜிப்பூர் தொகுதியும் சிராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை அறிந்த ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் முறையான அறிவிப்பு வெளிவந்ததும், நாங்கள் பா.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முடிவு செய்வோம்’ என்றார்.
இந்த நிலையியல் நேற்று பா.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முறையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதியிலும் பா.ஜ 17, நிதிஷ் தலையைிலான ஐக்கிய ஜனதாதளம் 16, சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 சீட், முன்னாள் முதல்வர் ஜிதம்ராம் மஞ்சி கட்சிக்கு ஒரு தொகுதி, உபேந்திரா குஷ்வாகா கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. அந்த கட்சி பா.ஜ கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து ஒன்றிய அமைச்சரும், பஸ்வான் தம்பியுமான பசுபதிகுமார் பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மோடி மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், தமக்கும், தன்னுடைய கட்சிக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாரஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு, லோக் ஜன் சக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது பாஜகவுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சர் ஆனார் பாரஸ். பசுபதிகுமார் பராஸ் பாஜக அமைச்சரவையில் உணவு பதப்படுத்தும் தொழில் துறைக்கு அமைச்சராக இருந்து வந்தார். இதனிடையே பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளின் “இந்தியா” கூட்டணியில் பசுபதி குமார் பராஸின் ராஷ்டிரிய லோக் ஜன சக்தி இணையக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..