சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை சாய்த்தது. அடுத்து விசாகப்பட்டினம், ஐதராபாத் நகரங்களில் நடந்த ஆட்டங்களில் கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளிடம் வீழ்ந்தது.
இந்த நிலையில், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியுடன் சிஎஸ்கே களமிறங்குகிறது. அதற்கு பேட்டிங் வரிசை வியூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.மொயீன் அலியை தொடக்க வீரராக அனுப்பி, ரச்சின் மற்றும் தோனியை நடுவரிசையில் களமிறக்கினால் ரன் குவிப்புக்கு உதவும். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் சென்னைக்கு சாதகமான அம்சம்.
அதே சமயம், ஷ்ரேயாஸ் தலைமையிலான கேகேஆர் தொடர்ச்சியாக ஐதராபாத், பெங்களூரு, டெல்லி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் உற்சாகமாக உள்ளது. சுனில் நரைனின் அதிரடி தொடக்கம் அந்த அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக உள்ளது. சால்ட், ரஸ்ஸல், ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், வருண் ஆகியோரும் ரன் குவிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு சென்னை தடை போடுமா, இல்லை சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வியை கேகேஆர் பரிசளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
* இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளதில் சென்னை 19-11 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது).
* அதிகபட்சமாக சென்னை 235, கொல்கத்தா 202 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக சென்னை 114, கொல்கத்தா 108 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* சேப்பாக்கத்தில் மோதிய 10 ஆட்டங்களில் சென்னை 7-3 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..