மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டியுள்ளது, நரிமன் பயிட்டில் உள்ள சிவசேனா தாக்கரே குழுவின் சிவாலயா அலுவலகத்தில் மகாவிகாஸ் அகாடியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், மகாராஷ்டிரா தேர்தலில் என்சிபி (எஸ்பி) பிரிவு 10 இடங்களில் போட்டியிட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதமூலம் லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி தொகுதி பகிர்வு பகிர்வு இறுதியாக முடிந்தது.
மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள்
நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 80 இடங்களைக் கொண்ட உத்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது. அங்கு 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
மகா விகாஸ் அகாடி தொகுதி பங்கீடு இறுதி
எம்விஏ சீட் பகிர்வு ஃபார்முலா: லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி தொகுதி பகிர்வு சோர்முலா இறுதியாக முடிந்தது. குடி பட்வாவையொட்டி, உத்தவ் தாக்கரே, நானா படோல் மற்றும் சரத் பவார் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர் ஃபார்முலாவையும் அறிவித்தார். உத்தவ் தாக்கரே (சிவசேனா) 21 இடங்களிலும், என்சிபி (சரத் பவார்) 10 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களாக, சாங்லி, பிவாண்டி மற்றும் மும்பையில் உள்ள இடங்கள் தொடர்பாக மகாவிகாஸ் அகாடியில் சிக்கல் ஏற்பட்டது. இன்று அது இறுதியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு சாங்லி தொகுதி கிடைத்துள்ளது.
மகாவிகாஸ் அகாடியில் அதிகம் பேசப்பட்ட சாங்லி, பிவாண்டி, மும்பை மக்களவைத் தொகுதிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சாங்லி மக்களவைத் தொகுதி தாக்கரே குழுவுடனும், பிவாண்டி மக்களவைத் தொகுதி சரத் பவார் குழுவுடனும், மும்பை-வடமத்திய மக்களவைத் தொகுதி காங்கிரஸுடனும் இருக்கும்.
உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி போட்டியிடும் தொகுதிகள் (21)
ஜல்கான், பர்பானி, நாசிக், பால்கர், கல்யாண், தானே, ராய்காட், மாவல், தாராஷிவ், ரத்னகிரி, புல்தானா, ஹட்கலங்கனே, சம்பாஜிநகர், ஷிர்டி, சாங்லி, ஹிங்கோலி, யவத்மால்-வாஷிம், வடமேற்கு மும்பை, தெற்கு மத்திய மும்பை, மும்பை தெற்கு, வடகிழக்கு மும்பை.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் (17)
நந்துர்பார், துலே, அகோலா, அமராவதி, நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராபூர், நாந்தேட், ஜல்னா, புனே, லத்தூர், சோலாப்பூர், கோலாப்பூர், ராம்டெக், மும்பை வடக்கு, வட மத்திய மும்பை
சரத் பவார் தேசியவாதி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் (10)
பாராமதி, ஷிரூர், சதாரா, பிவாண்டி, திண்டோரி, மாடா, ராவேர், வார்தா, தெற்கு அகமதுநகர், பீட்.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறும்
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றே பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
— முதல் கட்டம்: ஏப்ரல் 19.
— இரண்டாம் கட்டம்: ஏப்ரல் 26.
— மூன்றாம் கட்டம்: மே 7.
— நான்காவது கட்டம்: மே 13.
— ஐந்தாவது கட்டம்: மே 20.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..