ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றன. சவாய் மான்சிங் அரங்கில் நடக்கும் இப்போட்டி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானுக்கு 5வது லீக் ஆட்டமாகும். ஏற்கனவே விளையாடிய 4 ஆட்டங்களில் அந்த அணி லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு அணிகளை வீழ்த்தி இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்கிறது. ஏற்கனவே 3 உள்ளூர் போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டமும் ஜெய்பூரில் நடப்பது ராயல்சுக்கு சாதகமான அம்சம்.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் குவிக்க தடுமாறினாலும் சஞ்சு, பட்லர், ஹெட்மயர், பராக் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சிலும் சாஹல், போல்ட், ஆவேஷ் கான், பராக், பர்கர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விக்கெட் எடுக்காவிட்டாலும் சிக்கனமாகப் பந்து வீசுவது, வாய்ப்பு கிடைக்கும்போது பேட்டிங்கில் கலக்குவது என அஷ்வின் ஆல் ரவுண்டராக தன் பங்குக்கு அணிக்கு பலம் சேர்க்கிறார்.
அதே சமயம், கில் தலைமையிலான குஜராத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
நடப்புத் தொடரில் வெற்றியுடன் தொடங்கிய குஜராத் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுளது. முதல் ஆட்டத்தில் மும்பை, 3வது ஆட்டத்தில் ஐதராபாத் அணிகளை வென்றுள்ளது. சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. தமிழ் நாடு டைட்டன்சா என ஆச்சர்யப்படும் அளவுக்கு தமிழ்நாடு வீரர்கள் 4பேரை கொண்ட அணியாக குஜராத் திகழ்கிறது.
‘இம்பேக்ட்’ வீரர் சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது குஜராத்துக்கு பலம். சாஹா, மில்லர், ரஷீத் கான், மோகித், உமேஷ் பங்களிப்பும் உதவிகரமாக உள்ளது. ஆனால் வெற்றிக்கான ஒருங்கிணைப்பு இல்லாதது குஜராத் அணியின் பலவீனமாக தொடர்கிறது. தொடர்ச்சியாக 5வது வெற்றியை வசப்படுத்தும் உத்வேகத்துடன் ராஜஸ்தானும், 3வது வெற்றிக்காக குஜராத்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
* இரு அணிகளும் 5 முறை மட்டுமே மோதியுள்ளதில் குஜராத் 4-1 என ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
* அதிகபட்சமாக குஜராத் 192, ராஜஸ்தான் 188 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக குஜராத் 177, ராஜஸ்தான் 118 ரன் எடுத்துள்ளன.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..