ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்ததால் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறவிட்டிருந்தது. 19-வது ஓவரை வீசிய குல்தீப் சென், 20-வது ஓவரை வீசிய அவேஷ் கான் ஆகியோர் கூட்டாக 12 பந்துகளில் 35 ரன்களை தாரை வார்த்தது தோல்விக்கு முதன்மையான காரணமாக அமைந்தது.
அந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த டிரெண்ட் போல்டுக்கு 2 ஓவர்கள் மீதம் இருந்தது. பவர்பிளேவில் அவர், 2 ஓவர்களை வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். பொதுவாக ஐபிஎல் தொடர்களில் டிரெண்ட் போல்ட் பவர் பிளேவில்தான் அதிகம் பயன்டுத்தப்படுவார்.
எனினும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இறுதிக்கட்ட ஓவர்களில் அவரை, சஞ்சு சாம்சன் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால்அதை சாம்சன் செய்யத் தவறினார்.இதற்கான பலனை அணி அனுபவித்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களவியூகம் மற்றும் திட்டங்களை செயல்படுத்தல் பகுதியில் ராஜஸ்தான் அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் ஷிகர் தவண், ஜானி பேர்ஸ்டோ, பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோர் பார்மின்றி தவிக்கின்றனர். ஒரு சில ஆட்டங்களில் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்த சேம் கரணிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை. காயம் அடைந்த லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக களமிறங்கிய சிக்கந்தர் ராஸாவிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிவரவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவும் ரன்கள் சேர்க்க தடுமாறுகிறார் இதனால் இறுதிக்கட்ட ஓவர்களில் ஷசாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரது அதிரடி ஆட்டத்தை நம்பியே இருக்க வேண்டியது உள்ளது. இந்த ஜோடி குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி தேடிக்கொடுத்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்து வரை போராடி 2 ரன்களில் வெற்றியை தவறவிட்டது. ஒது ஒருபுறம் இருக்க கடந்த 3 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை முறையே 199, 199 மற்றும் 182 ரன்களை எடுக்க அனுமதித்தனர். எனினும் கடந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தி பார்முக்கு திரும்பி இருப்பது நம்பிக்கை அளிக்கக்கூடும்.
இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டங்களில் அதிரடியாக வெற்றிகளை குவிப்பதையும் அதன் பின்னர் ஒரு தோல்வியை சந்தித்தால் அங்கிருந்து சரிவை நோக்கி பயணிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இம்முறை இதற்கு அந்த அணி தீர்வு காணும் வகையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










