ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவிகள் போல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படும். திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.