இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் தசைப்பிடிப்பால் அவதிப்படும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்கா நீக்கப்பட்டு, ஆல் ரவுண்டர் ரமேஷ் மெண்டிஸ் இடம் பெற்றார்.
மழை காரணமாக 45 நிமிட தாமதத்துக்குப் பிறகு, பதும் நிசங்கா – குசால் மெண்டிஸ் இணைந்து இலங்கை இன்னிங்சை தொடங்கினர். குசால் மெண்டிஸ் 10 ரன்னில் வெளியேற, நிசங்கா – குசால் பெரேரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. நிசங்கா 32 ரன் எடுத்து பிஷ்னோய் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து பெரேரா – கமிந்து மெண்டிஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தனர்.
கமிந்து 26 ரன், குசால் பெரேரா 53 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்திக் பாண்டியா வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா இருவரும் ரவி பிஷ்னோய் சுழலில் அடுத்தடுத்து டக் அவுட்டாக, இலங்கை திடீர் சரிவை சந்தித்தது. கேப்டன் சரித் அசலங்கா 14, ரமேஷ் மெண்டிஸ் 12 ரன்னில் வெளியேற, மஹீஷ் தீக்ஷனா 2 ரன் எடுத்து அக்சர் படேல் சுழலில் கிளீன் போல்டானார்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. மதீஷா பதிராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆட்டத்தை தொடங்கினர். 3 பந்துகள் மட்டும் வீசிய நிலையில் மழை மீண்டும் பெய்தது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் விதிப்படி ஆட்டம் 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு 78 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 82 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..