• Sat. Apr 4th, 2026

தமிழ்நாட்டில் புதிதாக 3 சுங்கச்சாவடிகளை திறக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Byமு.மு

Sep 5, 2024
தமிழ்நாட்டில் புதிதாக 3 சுங்கச்சாவடிகளை திறக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. காரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. நங்கிளி கொண்டான், நாகம்பட்டியில் ஒருமுறை சென்று வர கட்டணமாக ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.