விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போது அனைத்து பயிர்களுக்கும் தேவையான உர தேவை இருப்பு மற்றும் விற்பனை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தின் போது யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் இதர உரங்களின் தேவை மற்றும் சம்பா பருவத்திற்கு தேவையான கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு தற்போதைய உர இருப்பு தேவையைவிட அதிகமாக அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.போதுமான உர இருப்பு இருந்த போதிலும், வேளாண் இணை இடுபொருட்களை, விற்பனையாளர்கள் கூடுதலாக விவசாயிகளிடம் வாங்குவதற்கு கட்டாயப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டது. விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யும் போது இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு விவசாயிகள் விரும்பாத இடுபொருள்களை வாங்க வலியுறுத்தும் உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டது. இதனை மீறும் உர விற்பனையாளர்கள் மற்றும் வேளாண் இடுபொருள் விற்பனை மையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தேவைப்படும் நிகழ்வில் உரிமத்தை இரத்து செய்யவும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரப்பயன்பாடு குறித்தும் மண்ணின் வளத்தை பாதுகாத்திடவும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட அலுவலர்கள் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், தரமான உரங்கள் வினியோகம் செய்வதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், செல்வி அபூர்வா, வேளாண்மைத் துறை இயக்குநர்,பி.முருகேஷ், உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..