சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்தமைக்காக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: அமெரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தோம். அமெரிக்காவில் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ஆயிரம் கோடி முதலீடுகள் கையெழுத்தானது. இதற்கு முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தோம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இதில் இரண்டு கோரிக்கை முன் வைக்கிறோம். முதலாவது, தமிழகத்தில் மது விற்பனை இலக்கு குறைக்க வேண்டும். இரண்டாவது, அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அனைத்து மாநிலங்கள் அரசும் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.
மதுவிலக்கில் அண்ணா உறுதியாக இருந்தார். ஒன்றிய அரசுக்கு அப்போது அழுத்தம் கொடுத்தார். அத்துடன் கலைஞரும் மதுவிலக்கில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அவர்களை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற மனுவை கோரிக்கையாக கொடுத்துள்ளோம்.
மதுவிலக்குதான் திமுகவின் கொள்கை என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், மாநாட்டில் திமுக சார்பில் அக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தித் தொடர்பாளர் இளங்கோவனும் பங்கேற்பார்கள் என முதல்வர் தெரிவித்தார்.
மதுவிலக்கு தமிழ்நாட்டில் வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நிர்வாகச் சிக்கலை கருத்தில் கொண்டு படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கும் இந்த மாநாட்டிற்கு எந்த சம்மதமும் இல்லை. பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்திதான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதனை திசை திருப்பும் வகையில் அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். விசிக-திமுக கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை. எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதனை முன்னிறுத்துகிறோம்.
மது ஒழிப்பு என்பது மக்கள் பிரச்னை. எனவே இதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்கும் என்பதுதான் என்னுடைய அறைகூவல். இதனை அரசியலுடன் முடிச்சு போட வேண்டாம். இந்தியாவில் போதைப் புழக்கம் அதிகமாக உள்ளது. எனவே இதனை குறைக்க ஒன்றிய அரசுக்கு பங்கு உள்ளது. ஏன் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க கூடாது என்பது எங்களுடைய கேள்வி. மது ஒழிப்பில் ஒன்றிய அரசுக்கு பொறுப்பிருக்கிறது என்று அண்ணா சொன்னதைத்தான் இன்று விசிக சொல்கிறது. இக் கருத்தில் திமுக உடன்படுவதால் மாநாட்டில் பங்கேற்க 2 பிரதிநிதிகளை அவர்கள் அனுப்பி வைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..