காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதத்துக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி அவமதித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த செவ்வாயன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தில் ராகுல்காந்தியை குறிவைத்து ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மிகவும் ஆட்சேபனைக்குரிய மற்றும் வன்முறை அறிக்கைகளை எழுப்புகிறார்கள். எனவே உங்களது தலைவர்களை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு கூறுங்கள் என்று வலியுறுத்தி இருந்தார்.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு பாஜ தலைவர் ஜேபி நட்டா எழுதிய பதில் கடிதத்தில், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக வார்த்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக பாஜ தலைவர்களின் புகார்களை சுட்டிக்காட்டி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘சில பாஜ தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் கட்டுப்பாடற்ற அறிக்கைகளை கருத்தில் கொண்டு கட்சி தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பிரதமருக்கு ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை, சமச்சீர் உரையாடல் மற்றும் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை இருந்திருந்தால் இந்த கடிதத்துக்கு அவரே பதில் எழுதி இருப்பார். அதற்கு பதிலாக அவர் நட்டாஜி எழுதிய ஆக்ரோஷமான பதிலை பெற்று அனுப்பியுள்ளார். 82 வயதான மூத்த தலைவரை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? இன்றைய அரசியல் விஷம் நிறைந்தது. பிரதமர் தனது பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வேறுமாதிரியாக நடந்து கொண்டு இருக்க வேண்டும். ஒரு மூத்த அரசியல்வாதிக்கு பிரதமர் மரியாதையுடன் பதில் அளித்து இருந்தால் பொதுமக்களிடம் அவர் மீதான கருத்து மற்றும் கண்ணியம் அதிகரித்து இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
* பாஜ தலைவரை விட காங்கிரஸ் தலைவர் உயர்ந்தவரா?
பிரியங்காவிற்கு பாஜ பதிலடி ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது எக்ஸ் பதிவில், ‘‘மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஜேபி நட்டா பாஜவின் தேசிய தலைவர். பாஜ தலைவரை விட காங்கிரஸ் தலைவர் உயர்ந்தவரா? மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர். ஆனால் நட்டா மாநிலங்களவையின் அவை தலைவர்.
எதிர்க்கட்சி தலைவர் அவை தலைவரை விட மேலானவரா? சிலர் நாட்டில் உள்ள அனைவரையும் விட மேலானவர்கள் என்று நினைப்பதால் தான் நான் பதிலளிக்கிறேன். நாடாளுமன்ற மரபுகளை புரிந்துகொள்ளாத ஒருவருக்கான பாடம் இது. நாம் அனைவரும் இந்தியாவின் குடிமக்கள். நாம் அனைவரும் சமம். மிகவும் மூத்தவர், பொது வாழ்வில் வாழ்நாள் அனுபவம் உள்ளவர் மற்றும் 140கோடி இந்தியர்களின் பிரதமராக இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










