கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூரில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுரு பேசியதாவது:
பாஜவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க கூடாது என்ற முடிவோடு தான் எடப்பாடி இருந்தார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த சூழ்நிலையில் கட்சியை துரோகிகள் இரண்டாக பிளந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் சென்று அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன் என்று கூறினார். அப்போது ஒன்றியத்தில் இருந்த பாஜ அரசு, கலைக்கும் வேலையை பார்த்தார்கள்.
இரட்டை இலையை முடக்கினார்கள். அந்த சூழ்நிலையில் எடப்பாடி, மத்திய அரசோடு இணக்கமாக இருந்து கட்சியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடி சொன்னால் தான் கட்சியில் இணைவேன் என்று கூறினார். பின்னர் கட்சியில் இணைந்த பிறகு சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறினார். அப்போதிருந்த சூழ்நிலையில் எடப்பாடி கட்சியை காப்பாற்ற வேண்டும், இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும் என்பதால் தான் பாஜவோடு கூட்டணி வைத்தார்.
கட்சியை அழித்துவிடுவார்கள், இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள், அதிமுகவை சின்னாபின்னமாக்கிவிடுவார்கள் என்ற காரணத்தினால் தான் பாஜவோடு கூட்டணியில் இருந்தோம். இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பல்வேறு அழுத்தங்கள், மிரட்டல்கள் வந்தது. ஆனால், பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக எடுத்த முடிவில் உறுதியாக இருந்தது. இவ்வாறு அவர் ேபசினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..