தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் உள்பட 12 வட்டாரங்கள் உள்ளன. ரத்த சோகையினால் பாதிப்பு மற்றும் பலவீனமாக வளரும் 3 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான உணவு வழங்க உலக வங்கி நிதி உதவியுடன் கிராமங்கள்தோறும் அங்கன்வாடி மையங்கள் சுமார் 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் தக்காளி சாதம் மற்றும் முட்டை, சாம்பார் சாதம், கொண்டை கடலை, பயறு, காய்கறி சாதம், லெமன் சா தம், பருப்பு சாதம் என மதிய உணவு வழங்கப்படுகிறது.
புதூர் வட்டாரத்தில் நாகலாபுரம், புதூர், பூதலாபுரம் என 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றின் கீழ் சுமார் 97 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மையத்தில் விட்டுவிட்டு பணிக்கு சென்று விடுவார்கள். அங்கு அக்குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு உள்ளன.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பராமரித்தல், சிறு கதைகள் சொல்லிக் கொடுத்தல், கேலி சித்திரங்கள், நற்பண்புகள் கற்பித்தல், சத்துமாவு கொலுக்கட்டை வழங்குதல், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு வழங்குதல் போன்றவை பணியாளர்களின் பணியாகும்.
பல கிராமங்களில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. புதூர் வட்டாரத்தில் கம்பத்துப்பட்டி, மணியக்காரன்பட்டி, மு.கோட்டூர், புதூர் பேரூராட்சியில் அம்பேத்கர் காலனி, சவுடாம்பிகா கோயில் அருகே உள்ள மையம், கண்ணப்பர் தெரு மையம் என 10க்கும் மேற்பட்ட மையங்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் பாதுகாப்பின்றி விரிசல் ஏற்பட்ட மண் சுவர் வீட்டில், பெயர்ந்து போன ஜல்லி உள்ள தரைத்தளத்தில் இருக்கையின்றி ஆபத்தான நிலையில் இருள் சூழ்ந்த கட்டிடத்தில் செயல்படுகின்றன. இதுபோன்று மாவட்டம் முழுவதும் பல மையங்கள் உள்ளன. இதனால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புத்தாடை கிடைக்குமா?
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வியாண்டு தொடக்கத்தில் பெண் குழந்தைகளுக்கு கவுன், ஆண் குழந்தைகளுக்கு டீ சர்ட் மற்றும் அரைக்கால் சட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு நவம்பர் மாதம் ஆகியும் புத்தாடை வழங்கப்படவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..