தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இன்று (20.12.2023) தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.