சென்னை vs பெங்களூரு ஐபிஎல் தொடக்கப் போட்டியைக் காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு புறம் தோனி, மறுபுறம் விராட்கோலி என இரு ஜாம்பவான்கள் மோதி கொள்வதால் முதல் ஆட்டமே ஐபிஎல் தொடர் மீதான…
மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!..
தமிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் பாதுகாத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடியை குற்றவாளி…
விஜயதரணிக்கு பாஜகவிலும் மக்களவை சீட் இல்லை!.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை. விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் வந்துள்ள இடைத்தேர்தலில் வி.எஸ்.நந்தினி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மத்திய சென்னையில் நாளை உதயநிதி பிரச்சாரம்!.
மத்திய சென்னை தொகுதியில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நாளை காலை சேப்பாக்கத்தில் உதயநிதி பரப்புரை செய்கிறார்.
‘எங்கள் வேட்பாளரை கைது செய்ய பாஜக திட்டம்!’ – மகன் குறித்து கண்ணீர் ததும்ப பேசிய துரைமுருகன்
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையொட்டி, இன்றைய தினம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை கதிர் ஆனந்தின் தந்தையும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, ‘‘இத்தனை ஆண்டுகாலம்…
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ✦ தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன் ✦ மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம் ✦ வேலூர் – ஏ.சி.சண்முகம்…
நடைமுறைப்படுத்தப்படாத அறிவிப்புகள் வழங்கி சீர்மரபு பழங்குடியினர் மக்களை ஏமாற்றும் ஊழல் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும், குற்றப் பழங்குடியினர் சட்டத்தால் ஒடுக்கப்பட்டு, கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மறுக்கப்பட்ட மக்கள், சுதந்திரம் கிடைத்த பின்னர், 1952 ஆம் ஆண்டில்தான், இந்தச் சட்டம் அகற்றப்பட்டு உண்மையான விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர்.…
”இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!.
இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர் என உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய…
ஐ.பி.எஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம்!.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், சி.எஸ்.கே அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!.
அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
