• Sun. May 31st, 2026

கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது!.

Byமு.மு

Feb 13, 2024
கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“புதிய கல்விக் கொள்கையின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, நமது கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேசமயமாக்கல் இலக்குகளை மேற்கொள்ள எமது அரசு உறுதிபூண்டுள்ளது. ஐ.ஐ.டி-தில்லி-அபுதாபி வளாகம் மற்றும் ஐ.ஐ.டி-சென்னை- சான்சிபார் வளாகம் ஆகியவை இந்த உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த உணர்வை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.”